Saturday, March 20, 2010

பசுமை போர்வை திட்டம்

நாள்: 20-மார்ச்-2010

புவி வெப்பமயமாதலை தடுக்க, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், மாவட்டம் தோறும் தேர்வு செய்யப் பட்ட நான்கு பள்ளிகளில், 'பசுமை போர்வை' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.புவி வெப்பமயம்: தொழிற்சாலை கள், வாகன பெருக்கம் உட்பட பல்வேறு விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்படும் புகை காரணமாக புவி வெப்பமயமாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதை தடுக்க சுற்றுச்சூழல் துறை சார்பில் இயற்கை சார்ந்த பொருள்கள் அழியாமலும், புதுப்பிக்கவல்ல எரிசக்திகளை பயன்படுத்த வலியுறுத்தப்பட்டு வருகிறது.புதிய திட்டம்: புவி வெப்ப மயமாதலை தடுக்கவும், கரியமிலவாயு தாக்கத்தை குறைக்கும் விதமாகவும் பள்ளிகளில், 'பசுமை போர்வை' என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக இரண்டு உயர்நிலை, இரண்டு மேல்நிலைப்பள்ளிகள் தேர்வுசெய்யப்பட உள்ளன. தமிழகத்தில், சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த, மாவட்டத்திற்கு தலா ஒரு லட்சம் வீதம், 31 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பள்ளிக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த நிதியில் பள்ளி வளாகத்தில் தேவையான மரக்கன்று களை நட்டு பாதுகாத்து வளர்க்கப்பட உள்ளன.இந்த கல்வியாண்டிலிருந்து ஆண்டுதோறும், ஒவ்வொரு மாவட்டத் திலும், நான்கு பள்ளிகளை தேர்வு செய்து, இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கான நிதி பயன்படுத்தும் விதம், திட்ட அறிக்கையை பள்ளிகளிடம் இருந்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள் ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில், முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்ட பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.

Refernces
தினமலர்


0 comments:

Post a Comment