Sunday, December 19, 2010

மரம் வளர்ப்பு - சிறு தகவல்கள் 6 (வேப்ப மரம்)

வேப்ப மரம்

முதலில் வேப்பமரம் நடவு மற்றும் பராமரிப்பை பார்த்துவிட்டு பிறகு  பயன்பாடுகளை பார்க்கலாம்.


வேப்பங்கன்று நட இடத்தை தேர்ந்தெடுத்தலும் நடுதலும்


வேப்பங்கன்று பராமரிப்பும் கண்காணிப்பும்


மழைகால பராமரிப்பு

குளிர்/பனி கால பராமரிப்பு

கோடைகால பராமரிப்பு 

 

வளரும்போது முக்கிய நிகழ்வுகள்

* கோடை மாதங்களில் பூ பூக்கும்

 

வேப்ப மரத்தின் பயன்கள்
 
கிராமப்புறத்தில் வேப்பமரம் / விவசாய பயன்கள்
* வேப்பம் கொட்டைகளை சேகரித்து வைக்கலாம்

* உதிரும் வேப்ப இலைகளை சேகரித்து வைக்கலாம்


நகர்ப்புறத்தில் வேப்பமரம்


மருத்துவ பயன்கள்

 

Saturday, May 1, 2010

கோவை செம்மொழி மாநாடு - மரம் வெட்டுதல் - குமறல்கள்

ஆயிரம் மரங்களின் நகரம் (அதிஷா) - http://www.athishaonline.com/2010/04/blog-post_23.html

தமிழகமெங்கும் ஒரு கோடி மரக்கன்று நட ஈஷாவுடன் பிரான்ஸ் நிறுவனம் ஒப்பந்தம்

செய்தி நாள்: 01-மே-2010

பிரான்ஸ் நிறுவனமான 'ஈவ்ஸ் ரோச்சர்' குழுமம், ஈஷா அறக்கட்டளைக்கு, ஒரு கோடி மரக்கன்றுகளுக்கான உதவித்தொகையை நேற்று வழங்கியது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

நடப்பாண்டு உலகெங்கும் பல்லினத் தாவரங்களுக்கான ஆண்டாக கொண்டாடப்படுகிறது. பிரான்ஸ் நிறுவனமான 'ஈவ்ஸ் ரோச்சர்' குழுமம் ஈஷா அறக்கட்டளைக்கு ஒரு கோடி மரக்கன்றுகளை அளிக்க முன் வந்துள்ளது. இந்த குழுமம் ஐ.நா.வின் உலகளாவிய திட்டமான 'பூமியின் நலனுக்காக மரம் நடுங்கள்' என்ற திட்டத்தின் கீழ் உலகெங்கும் பல நாடுகளில் மரக்கன்றுகள் நட்டு வருகிறது. மேலும் 2010ம் ஆண்டு பாலினத் தாவரங்களின் ஆண்டாக கொண்டாடப்படுவதால் 'ஈவ்ஸ் ரோச்சர்' குழுமம், ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று ஈஷாயோக மையத்தில் நடந்தது.

ஒப்பந்தத்தில், பசுமைக்கரங்கள் திட்ட இயக்குநர் சேகர், ஈவ்ஸ் ரோச்சர் குழும இயக்குநர் ஆரிலியா கேரி ஆகியோர் கையெழுத்திட்டனர். மரக்கன்றுகளை நட ஈவ்ஸ் ரோச்சர் குழுமம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட திட்டமிட்டுள்ளது.

தமிழகமெங்கும் புதிய மரக்கன்று பண்ணைகளை உருவாக்கி,36 வகையான மரக்கன்றுகளை வளர்த்து, தமிழகத்து மக்களுக்கு நன்கொடையாக தருவதை நோக்கமாக கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு ஈஷாவுக்கு 10 லட்சம் மரக்கன்றுகளை தந்தது. ஈஷாவின் பசுமைக்கரங்கள் திட்டத்தில் மரக்கன்றுகளை பயன்படுத்தியதில், இக்குழுமத்துக்கு திருப்தி ஏற்படவில்லை. மீண்டும், ஒரு கோடி மரக்கன்றுகளை அளிக்கவுள்ளது.

ஈஷாயோக மைய நிர்வாகி ஒருவர் கூறுகையில், மரக்கன்றுகளை நடுவதால்,தமிழகத்தில் பசுமைப்பரப்பை அதிகரிக்கலாம். ஈஷாவின் பசுமைக்கரங்கள் அமைப்பு, 'ஈவ்ஸ் ரோச்சர்' குழுமம் இணைந்து புதிய முயற்சியை துவக்கியுள்ளது. மரக்கன்றுகளை நட விருப்பமுள்ள தனிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஈஷா பசுமைக்கரங்கள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படலாம். இத்திட்டம் பற்றிய விபரங்கள் அறிய 0422 - 2580186 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.


Reference:
தினமலர்


Thursday, March 25, 2010

மரக்கன்று நடுதல், மரம் வளர்ப்பு - சிறு தகவல்கள் 5

இப்பகுதி, முன் அனுபம் இல்லாதவரால் எழுதப்பட்டது. தகவல் பிழைகள், மேம்பட்ட தகவல்களை பின்னூட்டத்தில்(Comments) தெரிவிக்கவும்.

அரச மரம்

அரச மரத்தின் பயன்கள்

அரச மரக்கன்று நட இடத்தை தேர்ந்தெடுத்தலும் நடுதலும்

அரச மரக்கன்று பராமரிப்பும் கண்காணிப்பும்




குமிழ் மரம்

குமிழ் மரத்தின் பயன்கள்

குமிழ் மரக்கன்று நட இடத்தை தேர்ந்தெடுத்தலும் நடுதலும்

குமிழ் மரக்கன்று பராமரிப்பும் கண்காணிப்பும்

திரு.லோகநாதன் - கோவையில் மரம் நடும் பேருந்து நடத்துனர்

திரு, எஸ். பாபு எழுதிய இக்கட்டுரை தன்னம்பிக்கை இணையதளத்தின் வழியாக எடுக்கப்பட்ட்டுள்ளது.

செய்தி நாள்: அக்டோபர்-2008

இரண்டு வாரங்களுக்கு முன்பு, கோவையில் “நெருஞ்சி இலக்கிய முற்றம்” என்ற அமைப்பின் சார்பாக ஒரு பாராட்டு விழா நடந்தது. பாராட்டப்பட்டவர்கள் இரண்டு பேர். ஒருவர் பேருந்து நடத்துனர் திரு.லோகநாதன். மற்றவர் தோழர் அறக்கட்டளை என்ற அமைப்பைச் சேர்ந்த திரு. சாந்தகுமார்.

இருவரும் சாதனைகளின் இரு வேறு சிகரங்கள். தனியொரு மனிதராக தமிழ்நாட்டில் இதுவரை முப்பதாயிரம் மரங்களுக்கும் மேலாக நட்டு சாதனை புரிந்திருக்கிறார் லோகநாதன். அவரது முயற்சியைப் பாராட்டி ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது. ஊரையே பசுமையாக்குகிறோம் பேர்வழி என்று வெறும் விளம்பரத்திற்காக மரங்களை நட்டு அதை புகைப்படம் எடுத்து செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்திக் கொண்டு, பிசினஸ் நோக்கத்தில் செயல்படும் எந்த ஒரு அமைப்பையும் சாராதவர் இவர் என்பது ஆச்சரியமான தகவல். தன்னுடைய சமூகப்பணிக்கு இவர் உதவி நாடுவது, பள்ளிக்கூட குழந்தைகளிடம் மட்டும் தான். பள்ளிக் கூடங்கள் தோறும் சென்று இயற்கை மற்றும் மரங்கள் சம்பந்தமான காட்சி (Slide show) நடத்துகிறார். பின்னர் ஆர்வமுள்ள மாணவ-மாணவியரைக் கொண்டு அந்தந்தப் பகுதிகளில் மரங்களை நடுகிறார்.

இன்றைய காலகட்டத்தில் “மரம் நடுவது” என்பது பேஷனாகிவிட்டது. மரம் நடு விழாக்களைப் பற்றி நாள்தோறும் செய்தித்தாள்களில் படிக்கிறோம். ஆனால் அந்த மரங்கள் எல்லாம் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றனவா என்று கேட்டால், இல்லை என்பது தான் உண்மை. ஆனால் லோகநாதன் சற்று வித்தியாசமானவர். எந்த இடத்தில் மரம் நட்டால் அது வளரும் என்பதை முதலில் ஆராய்ந்து இடங்களை தேர்வு செய்கிறார். பின்னர் பள்ளிகூடக் குழந்தைகளைக் கொண்டு அங்கே மரங்களை நட்டு, அந்த மரங்களுக்கு “ப்ரியா புளியமரம்”, “விக்னேஷ் வேப்பமரம்” என்று குழந்தைகளின் பெயரை சூட்டுகிறார். இதனால் இது தங்களுடைய மரம் என்கிற உணர்வும் பொறுப்பும் குழந்தைகளுக்கு வந்து விடுவதால், அவர்களே மரங்களுக்கு பாதுகாப்பு அளித்து, நீருற்றி பராமரிக்கிறார்கள்.

Reference:
தன்னம்பிக்கை இதழ் - ஒரு பாதசாரியின் பயணக்குறிப்பு